(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
[96:2]
'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
[96:3]
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
[96:4]
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
[96:5]
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
[96:6]
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
[96:7]
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
[96:8]
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
[96:9]
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
[96:10]
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
[96:11]
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
[96:12]
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
[96:13]
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
[96:14]
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
[96:15]
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
[96:16]
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
[96:17]
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
[96:18]
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
[96:19]
(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக